தமிழகத்தில் 19541 காலிப்பணியிட அறிவிப்பு 2020 !
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் மொத்தம் 10,906 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதன் பின் தீயணைப்பாளர் பதவிக்கு மட்டும் 835 புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இந்த பணியிடங்களுக்கு மேலும் புதிதாக 7800 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
இறுதியாக தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு 19541 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க 26.10.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் |
பணியிடங்கள் | 19541 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 26.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNUSRB காலிப்பணியிடம்:
- இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிக்கு மொத்தம் 11741 காலிப்பணியிடங்கள் உள்ளன.
- கருர் மாவட்டம் 14.10.2020 அன்று வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, மொத்தம் 7800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு மொத்தம் 19541 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Download Syllabus || Previous Year Question Paper
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் – Rs.18,200/- to Rs.52,900/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு கட்டணமாக ரூ.130/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் 26.09.2020 முதல் 26.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Official Additional Vacancy Notification PDF
Download Karur Notification 2020 Pdf
Download Detailed Notification
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please sent application for police Cader in tamil