எல்காட் அறிவிப்பு 2020 !!!
தமிழ்நாட்டின் மின்னணு நிறுவனமான ELCOT நிறுவனத்தில் இருந்து தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தேசிய போட்டி ஏலம் [National Competitive BID (NCB)] குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதால் விரைவில் விண்ணப்ப பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நெடுஞ்சாலை துறை, தமிழக நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு சாலை துறை திட்டதிற்கான அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து புதிய கொள்முதலிற்கான ஒப்பந்தம் தமிழ்நாட்டின் மின்னணு நிறுவனமான ELCOT நிறுவனத்துடன் போடப்பட்டிருப்பதால் அதற்கான BID அறிவிப்பினை தற்போது எல்காட் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த புதிய டெண்டரில் டேப்லட், மடிக்கணினிகள், டெஸ்க்டாப்ஸ் மற்றும் யுபிஎஸ் போன்றவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.
மொத்தமாக மூன்று மண்டலங்களாக பகுதிகளை பிரிக்கப்பட்டு அவற்றிற்கு ஏற்ப BID மற்றும் பதிவு செயல்முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரம் ஒரு மண்டலமாகவும், சேலம், திருப்பூர், கோவை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகள் ஒரு மண்டலமாகவும், மதுரை மற்றும் திருநெல்வேலி ஒரு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டெண்டர் ஆனது தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேசிய அளவிலான போட்டி ஏலத்திற்குரிய குறித்த பதிவுகளை கீழே உள்ள தேதிகளில் அடிப்படையில் மேற்கொள்ளலாம் என அறிவித்து கொள்கிறோம்.
இந்த ஏலம் குறித்த அறிவிப்பினையும் அழைப்பினையும் என்ற அரசின் அதிகாரபூர்வ தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் பதிவேற்ற பணிகளை 25.11.2020 அன்று மேற்கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை என்ற இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்