ஆசியர் பணிக்கு வயது வரம்பு 40 ஆக குறைப்பு – தமிழக அரசு புதிய அறிவிப்பு !
பள்ளிக்கல்வி துறையில் ஆசியர் பணி நியமனத்திற்கான வயது குறைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்படும் அரசு ஆசியர்களுக்கு இனி 40 வயதை கடந்தால் பணி நியமனம் கிடையாது என அறிவித்தது தமிழக கல்வித்துறை. தமிழக கல்வித்துறைகளில் நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வரும் ஆண்டு 2021 ஜனவரி மாதம் முதல் 40 வயதை கடந்த ஆசியர்கள் இனி அரசு பள்ளிகளில் பணியமர்த்தமாட்டர்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
கல்வித்துறை புதிய அறிவிப்பு
இதன்படி இதை நிறைவேற்றும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஆசியர்களுக்கும் அரசு ஆணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே இனி இந்த ஆணையே பின்பற்றப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் 58 வயது வரை உள்ள ஆசியர்களுக்கு கூட புதியதாக ஆசியர் பணிகளை அரசு வழங்கியது. இதனால் அவர்களை போதிய அளவு வேலை வாங்க இயலவில்லை என்பதால் பள்ளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது அதனால் 40 வயதை கடந்த ஆசியர்கள் இனி அரசு பள்ளிகளில் பணியமர்த்தமாட்டர்கள் என்ற இத்தகைய அறிவிப்பே சரியாக இருப்பதாக அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
இவ்வணையின் படி இனி நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசியர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் இனி 40 வயதிற்குள் இருப்பவர்களே பணியமர்ப்படுவார்கள், மற்றும் தமிழகத்தில் பல அரசு பள்ளிகளில் போதிய அளவு ஆசியர்கள் இன்னும் நியமனம் செய்யவில்லை என்பது குறிப்பித்தக்கது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |