தமிழக பள்ளிகள் திறக்கப்படும் தேதி ! – அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கரமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பள்ளி ஆண்டுத் தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக எடுக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் செப்.21 முதல் நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.பல அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் நிலை முன்பு போலவே நீடிக்கிறது.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை, அரசுப்பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறினார். சுமார் 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 10 இடங்களில் தொடக்கப் பள்ளிகளும், 15 இடங்களில் உயர்நிலை பள்ளிகளும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்