தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை – அமெரிக்க நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் !!!
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், படித்தவர், படிக்காதவர் என்று அனைவரும் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் வேலைவாய்ப்பு பெறுதல். நம் நாட்டில் அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தேடி கொண்டு உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகம் முள்ளம் பதிவு செய்து வரிசையில் காத்திருப்போர் ஏராளம்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இதனை சரி செய்ய மாநில திறன் மேம்பாட்டு துறையின் செயலகம் ஆனது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
அதில் ஒன்றாக தமிழகத்தில் வேலையற்ற 50 ஆயிரம் பேருக்கு இணைய வழியில் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
மேலும் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடுகளை இன்னும் சீர்படுத்திடவும் மேபடுத்திடவும் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.tnskill.tn.gov.in ஐ 2 கோடி மதிப்பில் புதிதாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த இணைய பயிற்சியின் மூலமாக 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுமானால் வேலையற்றோரின் விகிதாச்சாரம் குறைந்து பொருளாதாரம் மேம்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்