கல்லூரிகள் திறப்பு எப்போது ??? – மாநில அரசின் பதில்
கொரோனா வைரஸ் பரவலினால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கினாலும் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே தெப்போது அனைத்து வகுப்புகளும் நடைபெற்று வருகிறது என்றாலும் விரைவில் கல்லூரிகளை திறக்க வேண்டும் என்ற முயற்சியில் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநில அரசானது வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கல்லூரிகளை திறப்பதறகு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறையின் பல்வேறு ஆலோசனைகள் படி தூய்மையான சூழல், சமூக இடைவெளி தனி நபர் தூய்மை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யுஜிசியின் வழிகாட்டுதல்கள் படி அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் மேலும் இளங்கலை, டிப்ளமோ, பாலிடெக்னிக் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள் ஆகியவை நடத்தப்பட வேண்டியுள்ளதால் கல்லூரிகள் திறப்பு இன்றியமையாததாகும் ஏன்னு மாநில உயர் கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்