திருவண்ணாமலை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 !
திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில்
செயல்படும் கீழ்க்காணும் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழ்காணும் இணைய முகவரி மூலம் 15.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி |
பணிகள் | உதவியாளர், இளநிலை உதவியாளர் |
மொத்த பணியிடங்கள் | 127 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.06.2020 |
காலிப்பணியிடங்கள்:
உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் – 127
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 48 வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14500 /- முதல் ரூ. 47500 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.