நேபாள வெள்ளம்: காணாமல் போன தமிழர்களைத் தேட சிறப்புக் குழு

0

நேபாளம் செல்லும் உறவினர்களுக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழர்களைத் தேடும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட சிறப்புக் குழு காத்மாண்டுவில் முகாமிட்டுள்ளது.

84 பேரை தேடும் பணி

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் இதுவரை 21 பேர் மீட்கப்பட்டு புதுடெல்லி வழியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 84 பயணிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உறவினர்களுக்கு உதவி

காணாமல் போனவர்களின் நிலை குறித்து அறிய நேபாளத்துக்குச் செல்லும் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், நேபாள அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்புக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கவும், அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான தகவல் மற்றும் உதவிகளை வழங்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!