
ஞாயிற்றுக்கிழமையில் பொது விடுமுறை வந்தால், திங்கட்கிழமையும் விடுமுறை – சூப்பர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் நாடு!
உலக நாடுகளில் பல்வேறு வகையான தொழிலாளர் நலச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதில் மிகவும் சுவாரஸ்யமான விதிமுறை ஒன்றை அமல்படுத்தி வரும் நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அங்கு, எந்தவொரு தேசிய அல்லது பொது விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அதற்கடுத்த திங்கட்கிழமையும் அதிகாரப்பூர்வமாக விடுமுறையாக அறிவிக்கப்படும். இதன் மூலம், ஊழியர்கள் அவர்களுக்குரிய ஓய்வுநாள் நியாயமாகக் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்துகிறது.
விடிய விடிய கனமழை 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
இந்தச் சட்டம் “Substitute Public Holiday” எனப்படும் விதிமுறையின் கீழ் செயல்படுகிறது. இது தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபோன்ற நலச்சட்டம் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பல தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதன் மூலம் வேலை-வாழ்க்கை சமநிலை மேம்பட்டு, மனஅழுத்தம் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

























