CBSE 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு
மத்திய கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான பொது தேர்வை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பாடசாலைகளின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், தனிநபர் (Private Candidate) விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிதி வழங்கியதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மீண்டும் இலவச மாணவர் சேர்க்கை
மேலும், அடையாள அட்டை, புகைப்படம், கையொப்பம் மற்றும் பள்ளி சரிபார்ப்பு சான்றுகள் இல்லாமல் எந்த மாணவரும் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களின் விவரங்களை உறுதியாக சரிபார்த்துக் கொண்டு, நவம்பர் மாதத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவிப்பு அனைத்து CBSE பள்ளிகளுக்கும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























