
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னையில் ஏற்படவிருக்கும் குடிநீர் தட்டுப்பாடு.. திடீரென வேலை நிறுத்தம் அறிவித்த லாரி உரிமையாளர்கள்..!!
சென்னையில் மெட்ரோ பகுதிகளில் குடிநீருக்காக சுமார் 450 லாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நகரம் முழுவதும் 6,000 முதல் 18,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. “இந்த லாரிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வந்த நிலையில் 2024 பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் ஆனது முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடிநீர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு 2024 நவம்பரில் வெளியான நிலையில் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.
தமிழகத்தில் இந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..!!
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் ஒப்பந்தம் முடியும் என்ற நம்பிக்கையில் பலர் புதிய லாரிகளை வாங்கியிருந்தனர். அதற்கான மாத தவணை, காப்பீடு செலவுகளை கட்ட முடியாததால் சிலர் உயிரிழந்தும் உள்ளதாக தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவ ராவ் தெரிவித்தனர். இதை கண்டித்தும், ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யக் கோரியும், சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் ஜூன் 5 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாமதம் இல்லாமல் பணி ஆணை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது”.

























