மக்களே உஷார்….பென்ஷன் திட்டங்கள் பெயரில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மோசடி நிறுவனங்கள் பொதுமக்கள் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்து வருகின்றனர்.
இவ்வளவு டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? முழு விவரங்களுடன்!
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டங்களின் கீழ் ஓய்வூதிய நிதியை விடுவிக்க பணம் கோரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி வலைதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் NPS / APY சந்தாதாரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது. PFRDA அனுப்பும் எஸ்எம்எஸ் அனைத்தும் PFRDAI என்ற ஐடியுடன் அனுப்பப்படும் என்றும், சந்தாதாரர்கள் பதில்களை அனுப்புவதற்கு முன்பு சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

























