அதிகமாக UPI பயன்படுத்துபவரா நீங்கள்..?? இனி உங்க பரிவர்த்தனைகளுக்கும் சேவை கட்டணமா..??
தற்போதுள்ள நவீன யுகத்தில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் UPI தொழில்நுட்பத்தை மூலம் நடைபெற்று வருகின்றன. மேலும், பயனாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் உடனடி கட்டணங்களுக்கான பண பரிவர்த்தனைகளை செய்ய இந்த செயல்முறை உதவுகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் UPI பணப்பரிமாற்றங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “அன்றாட பரிவர்த்தனைகள் ஆன மின்சாரம், குடிநீர், போன் ரீசார்ஜ் கட்டணம் போன்றவற்றிற்காக மாதந்தோறும் இந்தியாவில் 16 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது”. ஏனென்றால் இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதால் தான். ஆனால் கடந்த ஆண்டு முதல் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.3 கட்டணம் விதித்த கூகுள் பே, தற்போது பில் பேமென்ட்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து, “ரூ.2,000-க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு GST விதிக்கப்பட உள்ளதாக பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக எந்த பரிசீலனையும் இன்னும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது”.

























