
இனி மூன்றே நாளில் PF கிளைம் செட்டில்மென்ட்…!! EPFO தொடங்கவிருக்கும் அதிரடி ஆட்டோமேட்டிக் பேமெண்ட் சிஸ்டம்…!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 12% தொகையானது PF ஆக பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், இது ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தால் (EPFO) மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே EPFO அமைப்பானது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில், குறிப்பாக EPFO வித்ட்ராவல் தொடர்பான கிளைம்களுக்கு 60% வரை ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் தீர்வு செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டில் பிழைகள் உள்ளதா..? மாற்றம் செய்யணுமா..? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க ..!!
குறிப்பாக, PF வித்ட்ராவல் தொடர்பான ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் பணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ. 1 லட்சமாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல் நலக்குறைவு அல்லது மருத்துவ செலவுகள், வீடு கட்டுதல், கல்வி செலவு மற்றும் திருமண செலவுகளுக்கான கிளைம்களும் விரைவில் ஆட்டோமோடின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மூன்றே நாளில் கிளைம் செட்டில்மென்ட் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

























