
பெண்களின் முதலீட்டுக்கு அதிக வட்டி தரும் சிறப்பு திட்டம்..!! இந்திய தபால் அலுவலகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்திய அஞ்சல் துறை சார்பாக மக்களுக்கு பல்வேறு சேமிப்பு மற்றும் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்த மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டதே இந்த மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் (MSSC) திட்டம். இந்நிலையில் இந்த MSSC திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தொடங்கப்பட்ட சிறு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ. 1,000 முதல் ரூ. 2,00,000 வரை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தபால் அலுவலகத்தில் செய்யும் முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 7.5% வரை வட்டி அளிக்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பெண்கள் மார்ச் 31 ஆம் தேதி என்று விதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக இத்திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிப்பதற்கு எந்தவித வயது வரம்பும் கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























