
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…கூடுதலாக 5 கிலோ இலவச அரசி வாங்கலாம்..மத்திய அரசின் அற்புதமான திட்டம் இதோ…
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக மாதந்தோறும் இலவச அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ (PM – GKAY) திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் நல உதவிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, “இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த, ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக 5 கிலோ இலவச உணவு தானியங்கள்” வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கோதுமை தானியமும், மீதமுள்ள மாநிலங்களுக்கு அரிசியும் ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகள், கூலி தொழில் செய்பவர்கள், முறைசாரா துறையில் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பித்து பயனடையலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.























