
Champions Trophy 2025: IND vs AUS போட்டியில் வெல்லப்போவது யார்..? கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அரையிறுதி போட்டி..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமையில் 2025 ஆம் ஆண்டுக்கான 15 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை டெஸ்ட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மேலும், குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் குரூப் A பிரிவில் கீழ் நடந்த கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபி 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று (04-03-2025) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பிற்பகல் 2.30 மணிக்கு மோதிக்கொள்கின்றன. மேலும், முன்னதாக நடந்த ICC தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில், ஆஸ்திரேலியா அணி 4 முறையும் இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது”.

























