
உலக பொருளாதார கூட்டமைப்பு உச்சி மாநாடு கோலாகலமாக தொடக்கம்…!! ” தொழில் துறை அமைச்சரின் அசத்தலான பேச்சு…!!
உலக பொருளாதார கூட்டமைப்பு 2025 ஆம் ஆண்டிற்கான 55 வது உச்சி மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நேற்று (20.01.2025) தொடங்கப்பட்டு வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கான செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தியாவை சேர்ந்த 100 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் இந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாடு சார்பில் இந்த உச்சிமாநாட்டில் தமிழ் நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி தமிழ்நாடு மற்றும் மாகராஷ்ரா என நமக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும்” என்றும் “வியட்நாம் போன்ற அயல் நாடுகளுக்கு முதலீடுகள் செல்வதை அனுமதிக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.


























