தமிழகத்தில் நாளை (31.10.2024) மின்தடை கிடையாது.. டென்ஷன் இல்லாம வேலைய பாருங்க மக்களே!!
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருவி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மின் பயனர்களுக்கு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாளை ( அக்டோபர்.31) தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாது. இதனால் மின் பயனர்கள் கவலையின்றி உங்களது வேலைகளை வழக்கம் போல மேற்கொள்ளலாம்.
























