தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.21) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தற்போது வெளியான அறிவிப்பின் படி அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (22.10.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு.. ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!
அதாவது மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























