கெட்டுப்போன சிக்கன் ரோல் விற்ற கடைக்கு சீல்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி.. முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சவர்மா, கிரில், தந்தூரி உள்ளிட்ட சிக்கன் வகைகளை உணவகங்களில் உண்டு உணவு ஒவ்வாமையின் காரணத்தினால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உணவு பாதுகாப்புத் துறையினர் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டு தரமற்ற உணவுகளை விநியோகம் செய்யும் உணவகங்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருகின்றனர்.
WORK FROM HOME அறிவித்த அரசு..!! மறுக்கும் IT நிறுவனங்கள் …!!
அந்த வகையில் தற்போது புதுக்கோட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட சிக்கன் ரோலை வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்தக் கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறையினர், உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.



























