ஓணம் பண்டிகையை முன்னிட்டு கிடு கிடுவென உயர்ந்த பூக்களின் விலை..! 1 கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா..?
தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் தொடர் பண்டிகைகளாக வர இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நாளை மறுநாள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, கடந்த வாரம் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 1 கிலோ 2000 ரூபாய்க்கும் , பிச்சிப்பூ 1 கிலோ 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.100 கோடி முதலீட்டில் தொழிற்சாலை..!!! ” தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து..!!



























