தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இன்றைய நிலவரம் குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மற்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் தீவிரமாக இருந்து வந்தது. தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு – 115 காலிப்பணியிடங்கள்!
இன்றைய அறிக்கையில், இன்றும் சென்னையில் பரவலாக மழை பெய்யும். அதேபோல் உள் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். கன்னியாகுமரியில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. இன்று தென் மேற்கை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. நாளை மறுநாள் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.