தமிழகத்தில் பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் போக்குவரத்து துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் பலகைகள்:
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும். பேருந்துகளில் பயணம் செய்யும் போது வழித்தடங்களை தெரிந்து கொள்வதில் பெரும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் பேருந்து சேவையுடன், ரயில் மற்றும் விமான சேவை இயங்கி வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் Project Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது!
எனவே பொதுமக்களுக்கு உதவும் வகையில் மெட்ரோ மற்றும் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகை போல பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் போக்குவரத்து துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, சென்னை அண்ணாசாலை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.