தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை வனத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குற்றாலம்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருந்து வந்தது. கோடை காலம் என்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அடித்து செல்லப்பட்டவர்களை பொதுமக்கள் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 4 பொருளியல் – முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!!
இந்நிலையில் வனப்பகுதிக்குள் உள்ள பழைய அருவி, பிரதான அருவி வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 2 அருவிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையிடம் ஒப்படைத்தால் வன காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.