மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
பிங்க் வாக்குச்சாவடி:
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த பேருந்துகளை எளிதாக அடையாளம் காணும் விதமாக பிங்க் நிற வண்ணம் தீட்டப்பட்டிருக்கும். இதனை பிங்க் பேருந்துகள். என்று மக்கள் அழைக்கின்றனர். இதே போல் தற்போது நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெற உள்ளது.
BEEI பாரத் எலெக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவன வேலைவாய்ப்பு 2024 – ரூ.34,200/- வரை சம்பளம்!
இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதான பெண்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் 16 பிங்க் வாக்குச்சாவடிகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடி மையங்களில் பெண்கள் எந்த வித சிரமமும் இன்றி எளிதாக வாக்களிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.