நேற்று வரலாறு காணாத கனமழையால் துபாயில் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.ஓர் ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் துபாய் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
துபாய் நகரம்:
நேற்று துபாயில் பெய்த வரலாறு காணாத கன மழையால் துபாய் நகரமே மூழ்கியுள்ளது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. துபாயின் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் உள்ளதால் சமுத்திரம் போல் காட்சியளிக்கிறது. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ்மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையமும் மழை நீரால் பாதிக்கப்பட்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் வறண்ட வானிலை காணப்படும் துபாயில் திடீரென ஓராண்டுக்குப் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் துபாய் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
CUB சிட்டி யூனியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும்!
அரேபிய தீபகற்ப பகுதியை கடந்து சென்ற மிகப்பெரிய புயலே இந்த பெரு மழைக்கு காரணம் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இதே அமைப்பால் ஓமன் மற்றும் தென்கிழக்கு ஈரானில் வழக்கத்துக்கு மாறான மழை கொட்டி தீர்த்துள்ளது. மழை மேலும் நீடிக்கும் என்று கூறப்படுவதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.