முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
யுஜிசி:
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் யுஜிசி சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் அட்டவணையை அடிப்படையாக கொண்டு அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்தும் முடிவு செய்யபடுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் – உடனே பாருங்க!
அதன்படி முதலாம் ஆண்டு இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 3-வது வாரத்திற்குள் கல்லூரிகள் திறக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தொழிற்சார்ந்த படிப்புகளில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.