தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மூன்று செண்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 34.2 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கிழக்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரீரு இடங்களில் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும், உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்.. வரலாறு படைக்குமா ரோஹித் படை??
தமிழக கடலோரப் பகுதிகளான குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும், இந்த நிலை டிசம்பர் 29ஆம் தேதி வரை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வங்க கடலின் குறிப்பிட்ட பகுதிகளிலும் சூறாவளி காற்று வீச உள்ளதால் டிசம்பர் 29ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.