மீண்டும் 2வது தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அணி – 134 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி!!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியினர் 134 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவினர்.
உலகக்கோப்பை;
10 நாடுகள் பங்கேற்கும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பத்தாவது லீக் ஆட்டம் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே, ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதியது. ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மோதி 199 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து, நேற்று நடைபெற்ற லீக் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளியையொட்டி சிறப்பு கிட் வழங்க திட்டம் – அரசு அறிவிப்பு!
அதாவது, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியினர் 50 ஓவரில் ஏழு விக்கெட்கள் இழந்து 311 ரன்களைகுவித்தனர் . இதன் பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியினர் 40.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே பெற்று இருந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியினர் 134 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணியினர் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில் அடுத்த ஆட்டத்தில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.