10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – நாளை முதல் விநியோகம்!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் அவரவர் பயின்ற பள்ளியிலேயே வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் நாளை முதல் அவரவர் படித்த பள்ளியின் மூலமாகவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்.. EPFO கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
மேலும், உயர்கல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் தற்காலிக சான்றிதழை தேர்வு துறை இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி மற்றும் மதிப்பெண் ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதனை சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அது பள்ளி கல்வித்துறை இயக்கத்தின் சார்பில் திருத்தங்கள் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.