8000க்கு மேல் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போகும் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் 8000க்கு மேல் ஆட்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணிநீக்கம் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் வேலை செய்த 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில் மேலும் சில ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவன CEO அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
TNPSC குரூப் 4 தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக்? பரபரப்பு தகவல்கள்!
இது குறித்து வெளியான அறிவிப்பில் சில வாரங்களில் மற்றொரு சுற்று ஆட்குறைப்புகளை சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் செய்ய இருப்பதாக தலைமை இயக்க அதிகாரி பிரையன் மில்ஹாம் கூறியுள்ளார். இந்த பணி நீக்கம் லாபத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2023 இல், சேல்ஸ்ஃபோர்ஸ் அதன் மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில் தற்போது மேலும் பணி நீக்கங்கள் இருப்பதால் ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates