தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வினாடி வினா:
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வளர மதிப்பீட்டு வினா விடை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Mock Test – முழு விவரம் உள்ளே!
இதனை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில் 6ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையும் 7 -ம் வகுப்பிற்கு செவ்வாய்க்கிழமையும் 8ம் வகுப்பிற்கு புதன்கிழமையும் 9ம் வகுப்புக்கு வியாழன் கிழமை தோறும் வினாடி வினா நடத்த வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களும் பிற்பகல் வேளைகளில் வினாடி வினா நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை நடத்த ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தலைமையகங்களில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.