ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் வழக்கு – மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு!!
பிரபல நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் குழந்தைகளுக்கான பேபி பவுடரை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த பவுடரில் வேதி பொருள் அதிக அளவு கலப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜான்சன் அண்டு ஜான்சன்:
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர், எண்ணெய், பேபி வைப்ஸ், ஷாம்பு, சோப்பு உள்ளிட்ட பல வகையான பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பும் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இயங்கி வரும் மத்திய மருந்து ஆய்வகம் ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக வேதி பொருள் கலப்பதாக தெரிவித்தது. இது குறித்த அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்தது. மேலும் இதனால் புற்று நோய் ஏற்பட கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த புகாரை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ. 15 லட்சம் அளிக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் – நீங்களும் பயனடைய வேண்டுமா? முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இதனை அடிப்படையாக கொண்டு மஹாராஷ்டிரா அரசு ஜான்சன் அண்டு ஜான்சன் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்தது. அத்துடன் விற்பனைக்கும் தடை விதித்தது. இதனை எதிர்த்து ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மூன்று நாட்களுக்குள் பவுடர் மாதிரிகளை சேகரித்து அரசு மாற்று தனியார் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.