முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம்? – அரசின் நடவடிக்கை!
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் முதல் படியான முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடு முன்னதாக கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விதிமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம்:
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்து துறைகளையும் தாக்கியது. அன்றாடம் மக்கள் தங்களின் வாழ்க்கையை சமாளிப்பதை பெரும் கடினமான காரியமாக மாற்றியது. ஆரம்ப கட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகளும் கண்டறியப்படவில்லை. இதனால் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் தான் முதல் படி நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இருந்தது.
இதனால் நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதனை கடைபிடிக்காத மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆரம்பம் முதல் கொரோனா பரவல் உச்ச நிலையிலேயே இருந்தது. இதனால் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் முதல் ஓமைக்ரான் வைரஸ் வரை அனைத்தும் டெல்லியில் ஏற்படுத்திய விளைவுகள் மிகவும் மோசமாக இருந்தது.
GATE 2023 தேர்வு குறித்த முக்கிய தகவல் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக அண்மையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்