மணமக்கள் பெயரை தெரிந்து அதிர்ச்சி அடைந்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் வர போகும் ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில், கதையின் திருப்புமுனையாக இருக்க போகும் கோபி ராதிகாவின் திருமணம் நடக்குமா என பல எதிர்பார்ப்புகளுடன் தினசரி எபிசோடுகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமண மேடையில் பாக்கியா செய்ய போகும் காரியம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவை அப்பாவியாக காட்டி வந்த நிலையில் தற்போது பெரிய தொழில் அதிபராக காட்ட தொடங்கி இருக்கின்றனர். தன்னை வேண்டாம் என சொன்ன கணவன் முன்னிலையில் சாதித்து காட்ட வேண்டும் என பாக்கியா பல முயற்சிகளை செய்கிறார். அதில் முதல்படியாக திருமண மண்டபத்தில் பெரிய சமையல் ஆர்டர் வாங்கி இருக்கிறார்.
அங்கே அவர் செய்ய போகும் முதல் ஆர்டர் கோபி ராதிகாவின் திருமணம் என தெரியாமல் இருக்க, மறுபக்கம் கோபியும் ராதிகாவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர். இருவருக்கும் இரண்டாவது திருமணம் என இல்லாமல், முதல் திருமணம் போல ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கிடையே ராமமூர்த்தி எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைத்து, ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ஆனால் அங்கே எல்லாரும் மண்டபத்திற்கு சென்றுவிட, கவலையில் ராமமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
ஆல்யா மானசா, சஞ்சீவை தொடர்ந்து Real ஜோடியாகும் விஜய் டிவி பிரபலங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
Exams Daily Mobile App Download
மறுபக்கம் செல்வி, மணமக்கள் பெயரை படிக்க முடியவில்லை என சொல்ல, பாக்கியா செல்வியை அழைத்து சென்று படிக்கிறார். அப்போது அது ராதிகா கோபி கல்யாணம் என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் தனக்கு சமையல் ஆர்டர் தான் முக்கியம் என நினைத்த பாக்கியா, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சமையல் வேலைகளை கவனிக்க, சீரியலில் ராமமூர்த்தியை வைத்து பெரிய ட்விஸ்ட் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்