கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைத்து பஞ்சாப் வீரருக்கும் அரசு வேலை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவிப்பு.
திருச்சியில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெஹ்ராடூனில் இருந்து அமிர்தசரஸ்க்கு விமான சேவை துவக்கம்.
சீன மக்கள்தொகை வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் மெதுவாகத் தொடர்கிறது.
நேபாளத்தின் மத்திய வங்கி இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை.
2020 ஆம் ஆண்டுக்கான உலக கட்டிடக்கலை தலைநகரமாக பிரேசிலிய நகரம் ரியோ டி ஜெனிரோ யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவு செயற்கைகோள் கலிஃபோர்னியாவிலிருந்து விண்வெளி சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டது.
உலக பொருளாதார மன்றம், WEF, வருடாந்திர சந்திப்பு டாவோஸில் தொடங்க உள்ளது.
தீம் ‘Globalization 4.0: Shaping a Global Architecture in the Age of the Fourth Industrial Revolution’
பெலிக்ஸ் ஷிஷேக்கேடி – காங்கோவின்ஜனாதிபதி
ஆண்ட்ரி ராஜோ எலினா – மடகாஸ்கரின்ஜனாதிபதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். ரஃபேல் நடால் கால் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
டாட்டா ஸ்டீல் சதுரங்க போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் அஜர்பைஜானின் ஷகிரியார் மாமடயாரோவை வென்றார்.
கென்யாவின் காஸ்மாஸ் லாகட் மற்றும் எத்தியோப்பியாவின் வொர்க்நேஷ் அலமு டாடா மும்பை மராத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரிவில் வென்றனர்.
புனேயில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன. ஒட்டுமொத்த கோப்பையை மகாராஷ்டிரா கைப்பற்றியது.