நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 31 2018
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 31 – உலக நகர தினம்
- சீனாவின் ஷாங்காய் நகரில் முதல் உலக நகர தினம் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. உலகளாவிய நகரமயமாக்கத்தில் உள்ள சர்வதேச சமூகத்தின் நலன்களை நாடுகள் மற்றும் நகரங்களுக்கிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், நிலையான நகர அபிவிருத்திக்கு பங்களிப்பதற்கும் இந்த நாள் மிகுந்த ஆதரவை அளிக்கின்றது.
- தீம்: Better City, Better Life.
தேசிய செய்திகள்
குஜராத்
உலகின் உயரமான வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு
- பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கேவடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலை கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.
- உலகின் மிக உயரமான, இந்தியாவின் இரும்பு மனிதன் என்றழைக்கப்படும் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலை அவரது 143 வது பிறந்த நாள் விழாவில் திறக்கப்பட்டது.
சர்வதேச செய்திகள்
அறிவியல் செய்திகள்
வட கிழக்கு பருவமழை
- வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தொடங்கும்.
வணிகம் & பொருளாதாரம்
தரவரிசை & குறியீடு
மாநாடுகள்
நிதி நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்தி சபை கூட்டம்
- நிதியியல் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில், FSDC, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் புது தில்லியில் கூட்டம் நடந்தது.
நியமனங்கள்
- AIBA உலக சாம்பியன்ஷிப் பிராண்ட் தூதர் – மேரி கோம்
பாதுகாப்பு செய்திகள்
விருதுகள்
- 2018 கிளெய்ட்ஸ்மேன் [Gleitsman] விருது – மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] பெண்கள் கல்வியை ஊக்குவித்ததற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழக விருது
விளையாட்டு செய்திகள்
ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டி
- சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டியில் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றார்.
PDF Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு