ஆண் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – பொன்மகன் திட்டத்தின் அம்சங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் ஆண் குழந்தைகளுக்காக சேமிக்க 2 வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் குழந்தைகளுக்காக சேமிக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் முதலீடு செய்வது மூலமாக குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் உள்ள செலவுகளை சுலபமாக சமாளிக்க முடியும். அதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறிப்பாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பொன்மகன் சேமிப்பு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். இத்திட்டம் ஆண் குழந்தைக்களுக்காக தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் திடீர் விளக்கம்!
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை மாத தொகையை செலுத்தி கொள்ளலாம். அத்துடன் முதிர்வு காலம் முடியும் முன் பணம் பெற்று கொள்ளலாம். மேலும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு பணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதில் 8.1% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டுக்கும் வழங்கப்படும் வட்டி விகிதம் மாறுபடுகிறது. அத்துடன் இத்திட்டத்தில் இணைய வயது வரம்பு ஏதும் இல்லை.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 50% பேர் மட்டுமே அனுமதி!
அடுத்ததாக பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் சேமிப்பு திட்டத்தில் முதலீட்டுக்கான வட்டியை செலுத்த தேவையில்லை. அத்துடன் இத்திட்டத்தில் இணைந்து குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவுக்கு ஏற்ற தொகையை சேமிக்க முடியும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த பிபிஎப் திட்டம் வங்கிகளிலும் உள்ளது. ஆனால் அஞ்சல் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கு 7.9 வட்டியும் வங்கிகளில் 7% வட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. இதையடுத்து இத்திட்டம் மூலம் பெறப்படும் வட்டி வருவாய்க்கு வரி சலுகைகளும் கிடைக்கிறது.