TNPSC குரூப் 4 வி.ஏ.ஓ 1436 காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் 1436 விஏஓ காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வானது அதிகப்படியான காலிப்பணியிடங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC குரூப் 4:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பணிக்கான தேர்வுகள் அனைத்தும் TNPSC மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. எனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
Airtel ஐ தொடர்ந்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய VI – பயனர்கள் அதிர்ச்சி!
இதன் காரணமாக அரசு பணிக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்து வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது அரசு பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் குரூப் 4 தேர்வுகள் மற்றும் விஏஓ தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது குரூப் 4 தேர்வுகள் மூலம் விஏஓ பணிகளுக்கு ஆள் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
இந்நிலையில் தமிழகத்தில் 1436 விஏஓ காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மற்ற துறைகளிலும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. எனவே வரும் குரூப் 4 தேர்வானது அதிகப்படியான காலிப்பணியிடங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படாத காரணத்தால் அதிகமானோர் தேர்வெழுதுவார்கள் என கூறப்படுகிறது.