Airtel ஐ தொடர்ந்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய VI – பயனர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனம் VI பிரீபெய்டு கட்டணங்களை 20 லிருந்து 25% வரை உயர்த்தி உள்ளது. மேலும் அதிகரிகரிக்கப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை மறுநாள் முதல் முதல் அமலுக்கு வரும் என்று VI தெரிவித்துள்ளது.
VI கட்டணங்கள்:
அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. கொரோனா தொற்று பரவ தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் அலுவலக பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளதால் மொபைல் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்து கணினி, லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அதிக டேட்டாக்களை வழங்க நெட்வொர்க் நிறுவனங்கள் முடிவு செய்து மலிவு விலையில் அதிக டேட்டா பெறும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த Post Office சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!
குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்கள் அதன் பயனர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கியது. இந்த நிலையில் பிரபல நெட்ஒர்க் நிறுவனமான ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளது. ஏர்டெல்லின் விலை குறைந்த ஸ்டார்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.79 திட்டத்தின் விலை ஏற்றப்பட்டு 99 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ரூ.149 பிளான் 179 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் முக ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனம் பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளது. VI யின் உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள் நவம்பர் 25 முதல் அமலுக்கு வரும் என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது அனைத்தையுமே இண்டர்நெட்டை பயன்படுத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும் கொரோனா பரவும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். அதனால் அனைத்தும் ஆன்லைன் மையமாகி விட்டது. இந்த நேரத்தில் தொடர்ந்து நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்துவது அதன் பயனர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.