முழு ஊரடங்கு நீக்கம், ஆக்லாந்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – நியூசிலாந்து அரசு உத்தரவு!
நியூசிலாந்து நாட்டில் தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைந்து வந்துள்ள சூழலில் இந்த வாரம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். அதே வேளையில் ஆக்லாந்து பகுதியில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
கொரோனா டெல்டா வகை வைரசால் அதிகம் பாதிப்பட்ட நியூசிலாந்து நாடு, தற்போது நோய் தாக்கத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறது. அதனால் நாடு முழுவதும் இந்த வாரம் முதல் கொரோனா தொடர்புடைய கட்டுப்பாடுகளை நீக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நியூசிலாந்தில் தீவிரமடைந்து வந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக கடுமையான ஊரடங்கு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் VPF கட்டணத்தில் 50% வரை மூன்று மாதங்களுக்கு சலுகை – தயாரிப்பாளர்கள் நிம்மதி!
இதனிடையே தற்போதுள்ள சூழல் சாதகமாக மாறி இருப்பதால் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருந்தாலும் அந்நாட்டின் தொற்று மையப்பகுதியாக கருதப்படும் ஆக்லாந்து நகரில் மட்டும் கடுமையான உத்தரவுகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நியூசிலாந்தில் வசித்து வரும் முதல் சுமார் மூன்று மில்லியன் மக்கள் நாளை (செப்டம்பர் 7) முதல் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிகிறது.
அதே நேரத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் மீண்டுமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருப்பதாக பிரதமர் ஆர்டெர்ன் கூறியுள்ளார். ஆனால் டெல்டா வகை பாதிப்புகளால் அதிகளவு சேதமடடைந்துள்ள ஆக்லாந்து நகரில், இன்னும் ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும், விரைவில் அந்த நகரமும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு, அக்.15 வரை ஆன்லைன் வகுப்புகள் – மாநில அரசு!
தற்போது நியூசிலாந்து நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் கீழ், மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். உட்புறங்களில் நடைபெறும் சமூக கூட்டங்களில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நியூசிலாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு கொரோனா இறப்பு கடந்த 4 ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.