தமிழகத்தில் VPF கட்டணத்தில் 50% வரை மூன்று மாதங்களுக்கு சலுகை – தயாரிப்பாளர்கள் நிம்மதி!
தமிழகத்தில் டிஜிட்டல் நிறுவனங்கள் படங்களுக்கு VPF கட்டணத்தில் 50% வரை மூன்று மாதங்களுக்கு சலுகை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர்களின் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
VPF கட்டணம்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவை மூடப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மேலும் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. அரசின் முயற்சியால் கடந்த ஜூன் மாதம் தொற்று பரவல் ஓரளவு குறைந்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு, அக்.15 வரை ஆன்லைன் வகுப்புகள் – மாநில அரசு!
அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கிய போதும் திரையரங்குகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அரசு கடந்த மாதம் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் படங்களுக்கு VPF கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களை திரையிட QUBE, UFO உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் VPF என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கின்றனர்.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – அரசு பதில்!
பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு 50 முதல் 70 லட்சம் வரையிலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு 20 லட்சம் வரையும் டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கின்றனர். இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது என்று கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் டிஜிட்டல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்தனர். இதையடுத்து தயாரிப்பாளர்களுக்கு 50% வரை VPF கட்டணத்தில் மூன்று மாதங்களுக்கு சலுகை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.