தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – அரசு பதில்!

0
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி - அரசு பதில்!
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி - அரசு பதில்!
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – அரசு பதில்!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக அன்று கோவில்களில் வழிபட்ட சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அரசின் நடவடிக்கையின் விளைவாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருந்தாலும் மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அதிகம் கூடும் கோவில் திருவிழாக்கள், மத ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – வல்லுனர்களின் முடிவு?

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையால் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த தடையை நீக்கக்கோரி திருப்பூரை சேர்ந்த இன்று முன்னேற்ற கழக தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் தயாராகி வருவதாகவும், அதற்கான நிலையான செயல்பாட்டு விதிகளை வகுத்து தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

டி20 உலகக்கோப்பை 2021 : பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! 

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு அனுப்பிய வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் தான் பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், சிறிய கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கோவில்களில் வைத்து வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் தேவையில்லை என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!