மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு, அக்.15 வரை ஆன்லைன் வகுப்புகள் – மாநில அரசு!
ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 15ம் தேதி வரை பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமானது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயர் அடைந்தனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி – அரசு பதில்!
ஊரடங்கு அமலில் இருந்தது தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடுவது தடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. அதனிடையே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் நோய் பரவும் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – வல்லுனர்களின் முடிவு?
தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் செப்டம்பர் 20ம் தேதி வரை தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து வரவிருக்கும் கல்வி அமர்வில் இருந்து கல்வி நிறுவனங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசு குடியிருப்பு பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 15 வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.