தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – வல்லுனர்களின் முடிவு?
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பாக வல்லுநர்கள் கூறியுள்ள கருத்துகளை பற்றி காணலாம்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு வரவேற்பு அளித்துள்ளார். இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு வருகிறது. இதற்கு விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பள்ளிகள் திறந்ததால் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
டி20 உலகக்கோப்பை 2021 : பாகிஸ்தான் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு!
ஏற்கனவே அவர்களுக்கு அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு 6 நாட்கள் ஆகிய நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகளை திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொடக்க நிலை மாணவர்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் பங்கு பெறாததால் அடிப்படை கல்வியினை முறையாக கற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எழுத்துக்களை மறக்கும் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழில் பழகுநா் பணி – நேர்காணல் தேதி அறிவிப்பு!
தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு 1 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.