தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழில் பழகுநா் பணி – நேர்காணல் தேதி அறிவிப்பு!
செப்டம்பர் 18ம் தேதி தஞ்சாவூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில் பழகுநர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ். விஜய கௌரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
நேர்காணல் அறிவிப்பு:
தமிழகத்தில் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 18ம் தேதி தஞ்சாவூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில் பழகுநர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு முதலியனவற்றை தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ். விஜய கௌரி கூறியுள்ளார்.
தமிழக அரசின் பொங்கல் பண்டிகை இலவச வேஷ்டி, சேலை – ரூ.157.38 கோடி ஒதுக்கீடு!
தஞ்சாவூர் மாவட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.டி.ஐ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,யில் ஒயர்மேன், எலக்ட்ரீசியன் பாடப்பிரிவை பயின்றவர்கள் தகுதியானவர்கள், ஐ.டி.ஐ., படித்து பட்டம் பெற்றவர்கள், அரசுத் துறையோ அல்லது தனியார் துறையில் ஏற்கனவே தொழில் பழகுநர் பயிற்சி முடிக்காதவா்கள் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வல்லம் சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நோ்காணலில் கலந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு நடவடிக்கை!
மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்து கொள்ளலாம். நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கல்வி தகுதி சான்றிதழ், வயது, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் முதலியவற்றின் அசல் மற்றும் நகலுடன் நேரில் செல்ல வேண்டும். விண்ணப்பதாரர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான அரசின் அசல் மற்றும் நகல் சான்றிதழுடன் நேரில் ஆஜராக வேண்டும் என தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ். விஜய கௌரி கூறியுள்ளார்.