பிட் பேப்பருடன் வசமாக சிக்கிய சரஸ்வதி, காப்பாற்றுவாரா தமிழ்? வெளியான ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும், சரஸ்வதியும்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் தான் தற்போது டாப் ரேட்டிங்கில் மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகின்றது. தனது குடும்ப சூழலின் காரணமாக அதிகமாக படிக்காமல் இருக்கும் தமிழ், தனது அத்தை பெண்ணை விரும்புகிறார். ஆனால், அவரோ தமிழின் படிப்பினை காரணம் காட்டி அவரை வெறுத்து விடுகிறார். இதனால் தமிழுக்கு படித்த பெண்ணை தான் மனைவியாக்க வேண்டும் என்று அவரது அம்மா கோதை தீவிரமாக இருந்து வருகிறார்.
ஜெனியை வீட்டிற்கு அழைத்து வரும் செழியன் – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதற்கிடையில் தமிழ் கோவிலில் பார்த்த நாயகியான சரஸ்வதியை காதலித்து வருகிறார். அவரது தம்பி கார்த்தி சப் கலெக்டர் சந்திரகலா மகளான வசுந்தராவை விரும்புகிறார். இருவரது திருமணத்தையும் நடத்தி விட வேண்டும் என்று தமிழ் உறுதியாக இருக்கிறார். அதற்காக தனது அம்மா மற்றும் அப்பா இருவருடனும் பேசி வருகிறார். இப்படியாக இருக்க, தற்போது ஒரு லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சரஸ்வதி தேர்வு எழுதுவதற்காக எக்ஸாம் ஹால் செல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அங்கு தனக்கு தெரிந்த கேள்விகள் வர வேண்டும் என்று கடவுளை வேண்டி விட்டு எழுத ஆரம்பிக்கிறார். அவர் விரும்பியதை போலவே அவருக்கு தெரிந்த கேள்விகள் வருகின்றது. ஆனால், அவருக்கு அருகில் இருக்கும் நபர் பிட் எடுத்து வருகிறார். அவருக்கு அருகில் ஆசிரியர் வந்ததும் அவர் அந்த பிட்டை சரஸ்வதியின் பக்கம் தூக்கி எறிகிறார். அப்போது சரஸ்வதி அதனை எடுத்து பார்க்கிறார். இதனை தவறாக புரிந்து கொள்ளும் பறக்கும் படையினர் சரஸ்வதி தான் பிட்டை கொண்டு வந்துள்ளார் என்று நினைத்து வெளியே அனுப்புகின்றனர். அப்போது அந்த வழியாக வரும் தமிழ் சரஸ்வதியை பார்த்து அதிர்ந்து விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது