ஜெனியை வீட்டிற்கு அழைத்து வரும் செழியன் – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது, “பாக்கியலட்சுமி” தான். தனது குடும்பம் மற்றும் கணவர் தான் உலகம் என்று பாக்கியா வாழ்ந்து வருகிறார். பின்னர், தனது மகனின் ஆதரவான வார்த்தைகளின் காரணமாக தனக்குள் இருக்கும் சமையல் திறமையினை கண்டு கொண்டு தனியாக பிசினஸ் செய்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் பாக்கியாவின் மூத்த மகன் செழியன் தனது மனைவி ஜெனியுடன் சண்டையிட்டு விடுகிறார்.
தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள், ரூ.4000 உதவித்தொகை – அமைச்சர் பேட்டி!
தான் பிளாட் வாங்க வேண்டும் என்று நினைத்த விஷயத்தினை தனது வீட்டினரிடம் கூறி விடுவதால், ஜெனியின் மீது அதிகமான கோபத்துடன் இருக்கிறார். இதனால் ஜெனி என்ன கேட்டாலும் அவர் மீது எரிந்து விழுகிறார். அப்போது செழியனின் பாட்டி குழந்தை குறித்து ஜெனியிடம் கேட்கிறார். அதனை செழியனிடம் ஜெனி தெரிவிக்கும் போது இருவருக்கும் சண்டை வந்து விடுகிறது. இதனால் ஜெனி கோபம் அடைந்து தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
இதனை அறிந்து கொள்ளும் பாக்கியா, நேராக ஜெனியிடம் சென்று பேசுகிறார். தான் செழியனிடம் சென்று பேசுவதாகவும் கூறுகிறார். வீட்டிற்கு வரும் பாக்கியா செழியனிடம் சென்று பேசி, ஜெனியை சமாதானம் செய்ய சொல்லுகிறார். அதே போல் இனி ஜெனி எக்காரணம் கொண்டும் அழக்கூடாது என்றும் கூறுகிறார். இதனால் தனது தவறினை உணர்ந்து கொள்ளும் செழியன் ஜெனியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.