தியேட்டர்கள், கோவில்களை திறக்க அனுமதி – ஜூலை 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளை அளித்து ஊரடங்கை வரும் ஜூலை 26 வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர்கள், கோவில்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்கள் மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளானது, குறிப்பாக வட மாநிலங்கள். அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையாலும், போதிய மருந்துகள் இல்லாததாலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் தலைநகர் டெல்லியில் ஆக்சிசன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் கடும் கட்டுபாடுகளை விதித்து ஊரடங்கை பிறப்பித்தது.
யுசிஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – கல்லூரி நிர்வாகங்கள் கவனத்திற்கு!
மக்கள் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல அரசு தடை விதித்தது. ஊரடங்கால் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டது. தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொற்றை குறைக்க அரசு முயற்சித்தது. மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் விளைவாக தொற்று பரவல் சற்று குறைந்தது. இதனால் மாநில அரசுகள் ஒரு சில தளர்வுகளை அளித்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஹரியானா அரசு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்துள்ளது. உணவகங்கள் , கோல்ஃப் மைதானம், கிளப் , போன்றவை 50% இருக்கைகளுடன் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல் திருமணங்கள், இறுதி சடங்குகளில் 100 பேர் பங்கேற்கவும் , திரையரங்குகளில் 50% இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்கலாம் எனவும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் ஆனால் 50 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.